சபாநாயகர் செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடிய எம்.எல்.ஏ

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (13:12 IST)
திரிபுரா சட்டசபையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுதீப் ராய் பர்மன், சபாநாயகர் முன்பு வைக்கப்பட்டிருந்த செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடியதால் சட்டசபை உள்ளே பரபரப்பு ஏற்பட்டது.


 

 
திரிபுரா மாநிலம் சட்டசபையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விவாதத்தின் போது திடீரென எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து அமளியில் ஈடுப்பட்டனர். அப்போது எம்.எல்.ஏ சுதீப் ராய் பர்மன், சபாநாயகர் முன்பு வைக்கப்பட்டிருந்த செங்கோலை தூக்கிக் கொண்டு சட்டசபைக்கு வெளியே ஓடியுள்ளார்.
 
பின்னர் சட்டசபையின் மார்ஷல் அவரை பிந்தொடர்ந்து, செங்கோலை மீட்டு வந்து அதே இடத்தில் வைத்தார். இதுகுறித்து சபாநாயகர் ராமேந்திர சந்திர தேப்நாத் கூறியதாவது:-
 
அவர் விவாத்தின் நடுவே திடீரென்று செங்கோலை எடுத்துக் கொண்டு ஓடினார். இதை அவர் செய்திருக்க கூடாது. எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. செங்கொலை எடுத்துக்கொண்டு ஓடுவது இது மூன்றாவது முறை, என்றார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments