Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்குப் பிறகு சிறந்த பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம்: திமுக எம்பி திருச்சி சிவா

Mahendran
வியாழன், 1 பிப்ரவரி 2024 (16:34 IST)
இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலுக்குப் பிறகு நாங்கள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என்று கூறினார். ஆனால் தேர்தலில் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் தேர்தலுக்குப் பிறகு நாங்கள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என்றும் திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.  
 
இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால் அடுத்ததாக அவர்கள் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய காத்திருக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. 
 
நாங்கள் வந்து அந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வோம். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். தேர்தலுக்குப் பிறகு மக்களுக்கு தேவையான மிகச்சிறந்த அம்சங்களுடன் சிறந்த பட்ஜெட்டை நாங்கள் வந்து தாக்கல் செய்வோம் என திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா நாங்கள் வந்து புதிய பட்ஜெட் தாக்கல் செய்வோம் என்று தெரிவித்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments