Webdunia - Bharat's app for daily news and videos

Install App

90 கண்டெய்னர்களுடன் காணாமல் போன ரயில்.. அதிர்ச்சியில் ரயில்வே அதிகாரிகள்..!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (17:02 IST)
90 கண்டெய்னர்களுடன் காணாமல் போன ரயில்.. அதிர்ச்சியில் ரயில்வே அதிகாரிகள்..!
90 கண்டெய்னர்களுடன் துறைமுகம் நோக்கி சென்ற ரயில் ஒன்று திடீரென காணாமல் போன சம்பவம் ரயில்வே அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 
 
பிப்ரவரி ஒன்றாம் தேதி 90 கண்டெய்னர்களுடன் சரக்கு ரயில் ஒன்று நாக்பூரிலிருந்து மும்பைக்கு புறப்பட்டது. மும்பையில் உள்ள ஜவகர்லால் நேரு துறைமுகத்திற்கு ஐந்து நாட்களில் போய் சேர வேண்டிய இந்த ரயில் 12 நாட்கள் ஆகியும் குறிப்பிட்ட இடத்திற்கு வரவில்லை என்றவுடன் அந்த ரயிலை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் இருந்தனர். 
 
கடைசியாக அந்த ரயில் கசரா என்ற ரயில் நிலையத்திற்கு வந்திருப்பதாகவும் அதன் பிறகு காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. 90 கண்டெய்னர்களுடன் ரயில் காணாமல் போனது எப்படி என்ற ஆச்சரியத்தில் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் இன்ஜினுக்கும்,  ரயில்வே அலுவலகத்துக்கும் இடையே உள்ள தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ரயிலை கண்டறிய கடுமையாக தேடி வருகிறோம் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments