Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை வாக்கு எண்ணிக்கை எதிரொலி: போக்குவரத்தில் திடீர் மாற்றம்;

Webdunia
புதன், 22 மே 2019 (11:44 IST)
நாடு முழுவதும் நாளை மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. நாளை இரவுக்குள் அடுத்த ஆட்சியை அமைப்பது யார்? என்பது தெரிந்துவிடும்
 
இந்த நிலையில் புதுச்சேரி பாராளுமன்றம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை எண்ணப்படுகிறது. இதனையடுத்து லாஸ்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ஏர்போர்ட் சாலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேபோல் நாவலர் நெடுஞ்செழியன் மேல்பள்ளி சாலை முதல் நாவற்குளம் சந்திப்பு வரையிலும்,  வள்ளலார் சாலையில் இருந்து உழவர்சந்தை வரையிலும் போக்குவரத்து தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் போக்குவரத்து தடை இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் எண்ணிக்கை முடியும் வரை அமலில் இருக்கும் என்றும், எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மாற்றுபாதையை பயன்படுத்துமாறு போக்குவரத்து போலீசார்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் புதுச்சேரி அரசு கேட்டுக்கொண்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

இன்று நடைபெறவிருந்த தவெக மாவட்ட செயலாளர் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல.. ஈபிஎஸ் ஆவேச பேச்சு..!

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments