Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா அச்சுறுத்தலால் தாஜ் மஹாலுக்கு வந்த சோதனை..

Arun Prasath
வியாழன், 5 மார்ச் 2020 (12:52 IST)
கொரோனா வைரஸ் இந்தியாவில் 29 பேருக்கு பரவியுள்ள நிலையில், தாஜ் மஹாலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குறைந்துள்ளது.

சீனாவைத் தொடர்ந்து 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே 3000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் தென் கொரியா, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது.

இதனிடையே இந்தியாவில் தற்போது 29 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆக்ராவில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதால் தாஜ் மஹாலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல், பீகார் மாநிலம் போத் கயா போன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தியாவில் முதலாவதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமான கேரளாவில் சுற்றுலா மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments