3வது முறையாக இன்று பிரதமராகும் மோடி; பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பு

Siva
ஞாயிறு, 9 ஜூன் 2024 (08:15 IST)
3வது முறையாக இன்று பிரதமராகும் மோடி பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு  தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர்  முகமது முய்ஸு, வங்கதேச பிரதமர்  ஷேக் ஹசீனா;  சீஷெல் துணை அதிபர் அகமது அஃபிஃப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹலும் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள இந்தியா  வருகை தந்துள்ளனர். அதேபோல் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே மற்றும் வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில் 3-வது முறையாக நாட்டின் பிரதமராக இன்று மாலை பதவியேற்க உள்ள நிலையில் சற்றுமுன் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி, சதைவ் அடல் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் நினைவிடங்களில் நரேந்திர மோடி மரியாதை செய்தார்.

மேலும் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடிவை சிறப்பாக நடத்த குடியரசு தலைவர் மாளிகை விழாக்கோலத்தில் உள்ளது. இன்று பிரதமராக மோடி பதவியேற்றதும் அடுத்தகட்டமாக 30 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments