Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு.. 13 மாநிலங்கள், 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு..!

Siva
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (07:31 IST)
தமிழகம் உட்பட சில மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த நிலையில் 13 மாநிலங்களில் 88 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து சற்றுமுன் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளதாகவும் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்குகளை பதிவு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய வாக்குப்பதிவில் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் பொதுமக்கள் வாக்களிக்கிறார்கள் என்றும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாம் கட்ட வாக்கு பதிவில் 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில்  இன்றைய தேர்தல் வாக்களிக்க  15.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம்.. கருவறையில் காட்டிய அறிகுறி

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments