Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

Siva
ஞாயிறு, 7 ஜனவரி 2024 (18:29 IST)
ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை என கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் இந்த விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் எங்களுக்கு இன்னும் அழைப்பு வரவில்லை என கர்நாடக மாநில துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு வருகை தர எனக்கோ, எங்கள் முதலமைச்சருக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் ராம பக்தன், அனுமார் பக்தன், நாங்கள் இங்கிருந்து பிரார்த்தனை செய்கிறோம், எங்கள் பக்தியை நாங்கள் எங்கள் இதயத்தில் வைத்திருக்கிறோம், இதில் அரசியல் செய்ய மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு.! தமிழக அரசு அறிக்கை..!!

தேர்தல் விதிமீறல்.! திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க.! அன்புமணி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments