Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு நடத்த 43 சதவீதம் எதிர்ப்பு: அதிர்ச்சியளிக்கும் கருத்துக்கணிப்பு!

ஜல்லிக்கட்டு நடத்த 43 சதவீதம் எதிர்ப்பு: அதிர்ச்சியளிக்கும் கருத்துக்கணிப்பு!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2017 (09:57 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் வலுத்து வருகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே கோஷமாய் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் வரை போராட்டம் ஓயாது என உலகுக்கு உரக்க சொல்லி வருகின்றனர்.


 
 
ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் 57 சதவீத மக்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், 43 சதவீத மக்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
 
தமிழகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் என கூறி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என தமிழக மக்கள் கூறி வருகின்றன. பிரச்சனை தமிழகத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டுமானால் தமிழகத்தில் மட்டும் நடத்தப்பட்டிருக்க வேண்டும் ஏனென்றால் ஜல்லிக்கட்டு தமிழர்களின் கோரிக்கை.
 
ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா நாடு தழுவிய அளவில் இணையதளத்தில் கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக மக்கள் உள்ளார்கள் என்பதை காட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தான் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது என தமிழக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 
அதாவது தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என தமிழகத்தில் தானே கருத்துக்கணிப்பு நடத்த முடியும், அதை விட்டுவிட்டு நாடுதழுவிய அளவில் நடத்தினால் எப்படி உண்மையான கருத்துக்கணிப்பு முடிவு கிடைக்கும் என டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இந்த கருத்துக்கணிப்பை தமிழக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர். இது தேவையற்ற ஒரு கருத்துக்கணிப்பு என்றும் கூறுகின்றனர்.
 

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments