Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுந்தரவன சதுப்பு நிலத்தில் மீன் பிடித்தவரை இழுத்துச் சென்ற புலி

Webdunia
சனி, 26 ஜூலை 2014 (15:21 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சுந்தரவன சதுப்பு நிலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை புலி அடித்து இழுத்துச் சென்றது.
 
சுந்தரவன சதுப்பு நிலத்தில் நேற்று 5 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென புலி ஒன்று பாய்ந்து சந்தோஷ் மோந்தல்(55) என்பவரை கடித்து இழுத்துச் சென்றது.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற நான்கு பேரும் புலி இழுத்துச்சென்ற பகுதியை நோக்கிச் சென்றனர். ஆனால் புலி சென்ற பகுதியை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
 
பின்னர், கோசபா காவல் நிலையம் மற்றும் உள்ளூர் வனத்துறை அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். சுந்தரவன சதுப்பு நிலத்தில் புலிகள் அடிக்கடி மீன்பிடிப்பவர்களை தாக்கும் சம்பவம் நடைபெற்றது வருகிறது. இப்பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments