Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாயை கொன்று சமைத்த மூன்று மாணவர்கள் கைது

Webdunia
புதன், 13 மே 2015 (17:24 IST)
பெங்களூரில் நாயை கொன்று சமைத்த குற்றச்சாட்டில் மூன்று மாணவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
பெங்களூரில் பயின்றுவரும் தோல்ஜிட், மைக்கல், ரோமென் எனும் மூன்று மாணவர்களும் 6 மாதங்களுக்கு முன்பிருந்து நாயை செல்லமாக வளர்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அதை கொலை செய்து சமைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 
 
இம்மாணவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து இது தொடர்பாக அருகிலிருந்த ஒருவர் விசாரித்துள்ளார். மேலும் இது குறித்து புகாரும் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் காவல் துறையினர் மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.
 
நாயை கொன்று கறி சமைத்ததை அறிந்ததும், தான் பெரும் அதிர்ச்சியடைந்ததாக புகார் அளித்தவர் தெரிவித்துள்ளார். இவர்கள் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டால் 2 வருடகால சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?

மேகதாது அணை விவகாரம்.! மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்..!!

தமிழகத்தில் இன்னொரு இடைத்தேர்தலா? லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய போவதாக தகவல்..!

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

Show comments