Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்றவர்கள் புதுப்பிக்க வேண்டும்: மத்திய அரசு..!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (09:37 IST)
10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதார் அட்டை பெற்றவர்கள் தற்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிகுறித்து உள்ளது. ஒவ்வொரு இந்தியருக்கும் உள்ள அடையாள அட்டையாக ஆதார் அட்டை உள்ளது என்பதும் இந்த ஆதார் அட்டை கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களிலும் இணைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
குறிப்பாக வங்கி கணக்கு, பான் எண், ரேசன் அட்டை, மின் எண், வாக்காளர் அடையாள அட்டையுடன் என அனைத்து ஆவணங்களுடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதார் அட்டை பெற்றவர்கள் தற்போது அந்த ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் மார்ச் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
மேலும் இந்த சேவையை மை ஆதார் இணையதளத்தில் மட்டுமே இலவசமாக பெற முடியும் என்றும் ஆதார் மையங்களில் நேரடியாக சென்ற புதுப்பித்தால் ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments