Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயக்கண்ணாடி முன்னால் பேசினாரா மோடி? - மீண்டும் சர்ச்சை

Webdunia
சனி, 11 ஜூன் 2016 (17:22 IST)
அமெரிக்காவில் உரை நிகழ்த்தியது குறித்து உலகெங்கிலும் உள்ள ஊடகங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் அதே வேளையில், அவரது பேச்சுக்குப் பின்னே ஒளிபரப்பு திரை இருப்பது தெரிய வந்துள்ளது.
 

 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது 66 முறை அமர்ந்தும் 8 முறை எழுந்து நின்றும் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர் என்று ஊடகங்கள் பெருமையாக எழுதி வருகின்றன.
 
ஆனால், மோடியின் பேச்சுக்குப் பின்னே ஒளிபரப்பு திரை [teleprompter] உள்ளது தெரிய வந்துள்ளது. மோடி உரையாற்றும் போது எதிரே ஒளிபரப்பு திரை வைக்கப்பட்டு உள்ளது. அதில், காட்டுப்பட்டும் வார்த்தைகளை வாசித்துதான் கைதட்டல் வாங்கி உள்ளார்.
 
வெளியிலிருந்து பார்ப்பதற்கு கண்ணாடி போலத் தெரியும் இந்த திரையின் எழுத்துக்கள், எதிரில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
 
2014 ஆம் ஆண்டு பிஎஸ்எல்வி விண்ணில் செலுத்தப்பட்டபோது ஆங்கிலத்தில் சரளமாக உரையாற்றியபோது முதன்முதலாக மோடி பயன்படுத்தியதாக ஊடகங்கள் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments