Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியை குறிவைக்கும் தற்கொலைப்படை: இந்தியாவிற்குள் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (18:35 IST)
பிரதமர் மோடியை தற்கொலைப்படை மூலம் கொல்ல திட்டம் தீட்டி லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் போல் நாட்டின் தலைநகர் டெல்லியிலும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்தை உடைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவும், கையெறி குண்டை வீசவும் லஷ்கர்-இ-தொய்பா திட்டமிட்டுள்ளது.
 
இந்த சதித்திட்டத்துடன் தீவிரவாத அமைப்பின் தளபதி அபு துஜானா என்பவனின் துணையுடன் 4 தீவிரவாதிகள் கடந்த மாதமே இந்தியாவிற்குள் நுழைந்ததாக தகவல்கள் அம்பலமாகி உள்ளன.
 
பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ க்கும் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் இந்திய பிரிவிற்கும் இந்த சதித்திட்டத்தில் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது.
 
மத்திய உளவுத்துறை மற்றும் டெல்லி, ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் பிரதமர் மோடியின் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டத்துடன் இந்தியாவிற்குள் நுழைந்துள்ள தீவிரவாதிகளை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

Show comments