Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்ததாக அறிவிக்கப்பட்டவர், புதைப்பதற்கு முன் உயிர்பிழைந்த அதிசயம் !

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (21:11 IST)
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் வசித்து வருபவர் பர்கான் ( 20), இவர் கடந்த ஜூன் 21 ஆம் தேதி அன்று ஒரு சாலைவிபத்தில் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.இதைக்கேட்டு அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அவரை சோகம் ததும்பிய மனதுடன் கண்ணீர்விட்டுக்கொண்டு கல்லறை நோக்கி நடந்தனர்.
ஆனால் அங்கு கல்லறையை அடைந்ததும், அவரது உடலில் அசைவு வந்ததைப் பார்த்த உறவினர்கள், அவரை மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
 
பின்னர் பர்கானின் உடலில் உயிர் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். தற்போது வரை சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை செலவுசெய்து பர்கானை காப்பாற்றி வருவதாக பர்கானின் உறவினர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.மேலும் பர்கானின் உடலில் மூளை செயல்படுவதாகவும், ரத்த அழுத்தம் சரியாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.அடக்கம் செய்யப் போகின்ற நேரத்தில் பர்கான் உயிர் பிழைத்தால் இந்த கஷ்டத்திலும் சிறுது நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments