Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (16:47 IST)
மத்திய அரசு அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி 1 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்ய இருக்கிறார்.
இந்த பட்ஜெட் மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் கடைசி பட்ஜெட் என்பதாலும் பாராளுமன்ற தேர்தல் வருவதாலும் இதில் பல்வேறு சலுகைகள் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போது உள்ள தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளதாக இருக்கிறது. 
 
மேலும் ரூ . 2 5 லட்சம் வரையில் ஈட்டப்படும் தனிநபர் வருமானத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
 
அதாவது ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5% சதவீதமும், ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான வருமானம் பெறுபவர்களுக்கு 20  %சதவீதமும், 10 லட்சத்துக்குமேல் வருமானம் பெறுபவர்களுக்கு 30 % வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பு ரூ 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments