Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில், தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை நூல் வெளியீடு

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (03:47 IST)
ஓவியர் புகழேந்தி எழுதிய தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை என்ற நூல் வெளியீ்ட்டு விழா மும்பையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
 

 
மும்பை முத்தமிழ் மன்றம் சார்பில், செம்பூர் காமராசர் சாலை, காமராசர் அரங்கில், மாவீரன் திலீபன் நினைவேந்தல் மற்றும், ஓவியர் புகழேந்தி எழுதிய தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை என்ற நூல் வெளியீ்ட்டு விழா  நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சிக்கு சுந்தர் சிவலிங்கம் தலைமையேற்றார். அ. கணேசன் உறுதிமொழி ஏற்று, தொடக்கவுரையாற்றினார். இதனையடுத்து, தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை நூல் வெளியிடப்பட்டது. மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன்  தமிழ்ச்செல்வன் நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். நவிமும்பை தமிழ்ச்சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் முதல் நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். விழா நிறைவில், நூலாசிரியர் ஓவியர் கு. புகழேந்தி ஏற்புரையாற்றினார்.
 
இந்த நிகழ்ச்சியில், மும்பை வாழ் தமிழ் மக்களும், தமிழின உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். 

பாலியல் வழக்கு.! மே 31ல் விசாரணை ஆஜராகும் பிரஜ்வல் ரேவண்ணா..!

ஜூன் 4-க்கு பிறகு மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவார்..! அமைச்சர் அமித்ஷா..!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்.! மழைக்கு வாய்ப்பு இருக்கா..?

ஜெயலலிதா ஆன்மிகவாதிதான்... ஆனால், மதவெறி பிடித்தவர் அல்ல: திருநாவுக்கரசர்

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்.! சத்யபிரத சாஹூ தகவல்..!!

Show comments