Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் முதல் குரங்கம்மை நோயாளி கண்டுபிடிப்பு: சுகாதார அமைச்சகம் தகவல்..!

Siva
ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (17:16 IST)
ஆப்பிரிக்க நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் குரங்கம்மை நோய் இந்தியாவிலும் பரவி விட்டதாகவும் முதல் குரங்கம்மை நோயாளி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குரங்கம்மை என்னும் நோய் ஆப்பிரிக்க நாடுகளில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தியுள்ளது என்பதும் இது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலத்தில் உள்ள விமான பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் குரங்கம்மை பாதிப்பு உள்ள நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும் அவர் எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments