Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்த லாரி..! தெறித்து ஓடிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்..!!

Senthil Velan
செவ்வாய், 21 மே 2024 (14:49 IST)
ஹைதராபாத் அருகே பெட்ரோல் பங்க்கில் லாரி டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்த ஊழியர்கள் தப்பி ஓடிய நிலையில்,  ஒரு ஊழியர் மட்டும் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தார்.
 
தெலங்கானா மாநிலம், புவனகிரி புறநகர் பகுதியில் போங்கிர் நலகொண்டா சாலையில் அமைந்துள்ள நயாரா பெட்ரோல் பங்கிற்குள் டீசல் நிரப்புவதற்காக லாரி ஒன்று நுழைந்தது.  அப்போது எதிர்பாராத விதமாக திடீரென லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. லாரியில் மளமளவென தீப்பிடித்ததும் பெட்ரோல் பங்க்கில் இருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கிருந்து தெறித்து ஓடினர். 
 
அப்போது பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர்,  தீயணைப்பு கருவியை எடுத்து வந்து, லாரியில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சித்தார்.  தீ பரவுவது குறைந்த பின்னர் மற்ற ஊழியர்களும் தீயணைப்பு கருவிகளுடன் வந்து உதவி, தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

ALSO READ: சிறுமி கூட்டு பாலியல் வன்கொடு..! சகோதரர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பு.!

இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. துணிவுடன் துரிதமாகச் செயல்பட்டு, பெரும் அழிவைத் தடுத்த பெட்ரோல் பங்க் ஊழியரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேனியில் டெங்கு காய்ச்சலால் மாணவன் உயிரிழப்பு! - மேலும் 5 சிறுவர்கள் சிகிச்சையில்..!

சென்னை மழையில் மக்கள் தத்தளிப்பு: பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் திமுக! - ஓபிஎஸ் விமர்சனம்!

ஏரியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக வெள்ளை நிற மாவை தூவியதாக குற்றசாட்டு: நடவடிக்கை எடுக்கப்படும் என -அமைச்சர் தாமோ.அன்பரசன் பதில்!

தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்....

திருப்பதியில் விடிய விடிய மழை: ஏழுமலையான் கோயில் முன்பு வெள்ளம்..!

அடுத்த கட்டுரையில்