Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசவத்தின் போது குழந்தைக்கு நடந்த கொடூரம் : பகீர் சம்பவம்

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2019 (14:46 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரபல அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது செவிலியர் 
 
குழந்தையை வேகமாக இழுத்ததால் பிஞ்சுக் குழந்தை பாதியாக வெளிவந்த சம்பவம்  நாடு முழுவதும்  அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலம் ஜெல்சல்மார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திஷாகன்வார் என்ற கர்பிணிப்பெண் பிரசவத்திற்காக ஜனவரி 6 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவரது பிரசவத்தின் போது  ஆண் செவிலியர் ஒருவர் தான் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது.
 
அப்பொழுது குழ்ந்தை வெளியே வரும் வேளையில் வேகமாக அவர் இழுத்ததால் பிஞ்சு குழ்ந்தையின் உடல் பகுதி பாதிபாதியாக வெளியே வந்துள்ளது. இதைப் பார்த்து பதறிய செவிலியர் குழந்தை பிறப்பதிலேயே குறை உள்ளது என்றும் கர்பிணியின் கணவரிடம் கூறியுள்ளார்.
 
இன்னொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதும் கர்ப்பிணியைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் தலைப்பகுதி மற்றும் அவரது வயிற்றுக்குள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
 
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்  ராம்நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆண் செவிலியர்கள் அம்ரிட்லால், ஜூன்சார் சிங் ஆகிய இருவரையும் கைது செய்ய வலியுறுத்தினர்.
 
இது பற்றி தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்தனர். ஆனால் கைது செய்யப்படவில்லை என தெரிகிறது. இப்பிரச்சனை மேலும் பூதாகராகி வருவதால் கூடிய விரைவில் ஆண் செவிலியர்கள் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments