Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாதத்தை ஒடுக்க உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும்: சுஷ்மா சுவராஜ்

Webdunia
புதன், 17 டிசம்பர் 2014 (18:24 IST)
பயங்கரவாதத்தை ஒடுக்க உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
 
மக்களவையில் இன்று சிட்னி தாக்குதல், பெஷாவர் தாக்குதல்களை குறிப்பிட்டு பேசிய சுஷ்மா சுவராஜ், "ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என உலகின் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு கண்டங்களில் உள்ள இரண்டு நாடுகளில் நடந்துள்ளன.
 
இந்தச் சம்பவங்கள் ஒரே ஒரு விஷயத்தையே சொல்கின்றன. அது, உலகில் அனைத்து நாடுகளுக்கும் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் சமமாக இருக்கிறது என்பது.
 
ஒட்டுமொத்த உலகமும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டுவதற்கான அழைப்பு இது. அத்தகைய பயங்கரவாதத்துக்கு எதிரான முயற்சிக்கு ஒத்துழைக்க இந்தியா தயாராக இருக்கிறது" என்றார்.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments