Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (20:24 IST)
சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு!
தெலங்கானா மாநிலத்தில் சாலையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் மொத்தம் 39 பயணிகளும் நடத்துனர் மற்றும் ஓட்டுநரும் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் அந்த பேருந்து ஸ்டேஷன்பூர் என்ற பகுதியில் வந்தபோது திடீரென பேருந்தின் பின்பக்கம் இருந்து புகை வந்தது 
 
இதை பார்த்த பயணிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தகவல் தெரிவிக்கவே உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். சிறிது நேரத்தில் பேருந்து மளமளவென கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இருப்பினும் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments