5ஜி தொழில்நுட்பத்தால் கொரோனா பரவவில்லை – தொலை தொடர்புத் துறை விளக்கம்

Webdunia
புதன், 19 மே 2021 (16:04 IST)
இந்தியாவில் கொரோனா பரவலுக்கு 5ஜி தொழில்நுட்பம் காரணம் என பரவி வரும் வதந்தி குறித்து தொலைத்தொடர்பு துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தினசரி பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் குறித்த பல்வேறு போலியான செய்திகள், வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அப்படியாக 5ஜி தொழில்நுட்பத்தால்தான் இந்தியாவில் கொரோனா பரவுகிறது என வாட்ஸப் உள்ளிட்ட செயலிகளில் பார்வேர்டு செய்யப்பட்ட போலி செய்தி வேகமாய் பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தொலைத்தொடர்பு துறை ”5ஜி தொழில்நுட்பத்திற்கும் கொரோனாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. செல்போன் கோபுரங்களில் 5ஜி தொழிநுட்பம் சோதனை தொடர்பாக வெளியாகும் தகவல்கள் தவறானவை. 5ஜி இணைப்பு சோதனை இந்தியாவில் எங்கும் தொடங்கப்படவில்லை” என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments