Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானாவில் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு: 2 பேர் பலி

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2015 (09:24 IST)
தெலங்கானாவில் பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயமடைந்தனர்.
 
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 
 
அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள், அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், இசம்பவம் குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments