Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலையை தடுக்க இலவசமாக மது சப்ளை செய்த தன்னார்வலர் கைது

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (12:25 IST)
தற்கொலையை தடுக்க இலவசமாக மது சப்ளை செய்த தன்னார்வலர் கைது
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மூன்று வாரங்களாக நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மதுவுக்கு அடிமையான பலர் திண்டாட்டத்தில் உள்ளனர். சாப்பாடு கூட இல்லாமல் இருந்துவிடுவோம், மது அருந்தாமல் இருக்க முடியாது என்று கூறிய பலரில் ஒரு சிலர் மது கிடைக்காமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக மது குடிக்க முடியாமல் திண்டாடிய மது பிரியர்களுக்கு தெலுங்கானாவை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் இலவசமாக மது வழங்கியுள்ளார். ஐதராபாத்தை சேர்ந்த  குமார் என்பவர் ஊரடங்கிற்கு முன்னதாகவே மொத்தமாக வாங்கி வைத்த மதுபாட்டில்களை குடிமகன்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தார்
 
கடந்த மூன்று வாரங்களாக மது கிடைக்காமல் இருந்த பலர் அவரிடம் மது வாங்கி குடித்து திருப்தி அடைந்தனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விசாரணை செய்த தெலுங்கானா போலீசார், ஊரடங்கு நேரத்தில் மது விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments