Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று திருமணம்; மூன்று கணவர்கள்; மூன்று வரதட்சணை வழக்குகள்! – தெலுங்கானாவின் சர்ச்சை பெண்!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (12:59 IST)
தெலுங்கானாவில் பெண் ஒருவர் தொடர்ந்து மூன்று பேரை திருமணம் செய்து மூன்று பேர் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மனகொடூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ரவளி. கடந்த 2015ம் ஆண்டு சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்த இவர் மூன்றே மாதங்களில் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தார். அதை தொடர்ந்து சுரேஷிடமிருந்து மூன்று லட்சம் இழப்பீடாக பெற்றுக் கொண்டு அவரை விவாகரத்து செய்துள்ளார்.

பிறகு கொய்யூறு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட ரவளி மணமாகி ஐந்தே மாதங்களில் அவர் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவரிடம் மூன்று லட்சம் இழப்பீடாக பெற்றுக் கொண்டு மீண்டும் விவாகரத்து.

தற்போது மூன்றாவதாக சுரேஷ் என்ற இன்னொரு நபரை திருமணம் செய்துள்ளார். திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் வரதட்சணை புகார். இத போலீஸார் ஏற்காததால் ரவளி தண்ணீர் தொட்டி மீது ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே இரண்டாவது கணவர் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மூண்றாவது கணவரை திருமணம் செய்யும் போது ரவளி கர்ப்பமாக இருந்ததாகவும் அது தெரிந்தே மூன்றாவதாக சுரேஷ் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments