Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளியில் புளூ வேல் விளையாடிய 20 மாணவர்கள் மீட்பு; அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள்

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (17:31 IST)
கர்நாடக மாநிலம் பெலகாவில் உள்ள கேந்திரிய வித்யாலயா புளூவேல் கேம் விளையாடிய 20 மாணவர்களை ஆசியர்கள் மீட்டனர்.


 

 
கர்நாடக மாநிலம் பெலகாவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கைகளில் காயங்களை இருப்பதை ஆசிரியர்கள் கண்டதாக கூறப்படுகிறது. அவற்றை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் பள்ளி முழுவதும் அனைத்து மாணவர்களிடமும் சோதனை செய்துள்ளனர்.
 
அதில் 20 பேர் புளூ வேல் கேம் விளையாடுவது தெரிய வந்துள்ளது. அதில் 14 மாணவர்கள், 6 மாணவிகள் என மொத்தம் 20 பேர் கைகளில் கீறல்கள் இருந்துள்ளது. இதைவைத்தே அவர்கள் புளூ வேல் கேம் விளையாடுவது தெரியவந்துள்ளது. 
 
இதையடுத்து பள்ளியில் உள்ள 3000 மாணவர்களுக்கு புளூ வேல் விளையாட்டின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்னும் இந்த புளூ வேல் விளையாட்டு இந்தியாவை விட்டு வெளியேறவில்லை. உயிரை பறிக்க இன்னும் இந்தியாவில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.   

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments