Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று சிறுமிகள் பலாத்காரம்: கொடூர ஆசிரியர் கைது!

மூன்று சிறுமிகள் பலாத்காரம்: கொடூர ஆசிரியர் கைது!

Webdunia
புதன், 5 அக்டோபர் 2016 (15:17 IST)
மத்திய பிரதேச மாநிலம் ரெய்சன் மாவட்டத்தில் தொடக்க பள்ளியில் படிக்கும் மூன்று சிறுமிகளை அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
ரெய்சன் மாவட்டம், பகோரியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வந்த மூன்று மாணவிகளை, அப்பள்ளியில் பணிபுரியும் 40 வயதான துளசிராம் என்பவர் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
 
பலாத்காரம் செய்யப்பட்ட இரண்டு மாணவிகளுக்கு 9 வயது மற்றும் ஒருவருக்கு 11 வயது ஆகும். இந்த மாணவிகளை கடந்த ஒரு மாத காலமாக மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார் ஆசிரியர் துளசிராம்.
 
ஆசிரியரின் இந்த வக்கிர செயலை அறிந்த சிறுமியின் பெற்றோர் அவர் மீது தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
 
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். ஆசிரியர் துளசிராம் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட ஆசிரியரை பதவி நீக்கம் செய்வதாக மாவட்ட தலைமை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments