Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீரை சாப்பிட்ட ஆசிரியை, மாரடைப்பால் இறந்த துயர சம்பவம்..

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (12:27 IST)
வில்லியனூரில் கீரையும் மோர் சாதமும் சாப்பிட்ட ஆசிரியை, மாரடைப்பு வந்து பலியான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வில்லியனூர் அருகே மேல்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்பவர் ஆசிரியர் பட்டபடிப்பு முடித்துள்ளார். இவருக்கு வயது 28. இந்நிலையில் மதியம் ஆர்த்தி, கீரை மற்றும் மோர் சாதம் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறுது நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ஆர்த்தியை புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆர்த்தியை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆர்த்தி இறந்துவிட்டதாக கூறினர். இதை தொடர்ந்து மங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில், நூடுல்ஸ் சாப்பிட்டு சுங்க சாவடி ஊழியர் ஒருவர் இறந்துபோனார். இதைத் தொடர்ந்து நேற்று முந்தினம் நண்டு குழம்பு சாப்பிட்ட சின்ன காலாப்பட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் மாரடைப்பால் இறந்து போனார். தற்போது கீரையும் மோர் சாதமும் சாப்பிட்ட பட்டதாரி ஆசிரியை ஒருவர் மாரடைப்பால் இறந்துள்ளது, அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து.. அதிருப்தியில் பயணிகள்..!

காமெடி நடிகர் விஜய் கணேஷ் மகன் திருமண வரவேற்பில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்!

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments