Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முட்டுக்கொடுக்கும் தமிழிசை: தோல்வி பயத்தில் உளறிய பரிதாபம்

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (11:38 IST)
5 மாநில சட்டபேரவை தேர்தலில் பின்னடைவில் உள்ள பாஜக தோல்வியைக் கண்டு ஒரு போதும் துவளாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சண்டிகார், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் கடந்த ஒரு மாதமாக பல கட்டமாக நடைபெற்று வந்தது. அந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியாக இருகின்றன. தற்பொழுது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 
 
5 மாநில தேர்தல்களில் தெலிங்கானாவில் டி.ஆர்.எஸ் ஆட்சியை தக்க வைத்துள்ளது. மத்தியபிரதேசம், சத்திஸ்கர் ஆகிய இடங்களில் பாஜகவை விட காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மிசோரமை பொறுத்தவரை எம்.என்.எஃப் முன்னிலையில் உள்ளது. 
 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தோல்வியைக் கண்டு பாஜக ஒரு போதும் துவளாது. மோடியை தவிர எந்த சக்தியும் பெரிய சக்தியாக ஆக முடியாது. பாஜக ஒரு மிகப்பெரிய கட்சி, அதை யாராலும் அசைக்க முடியாது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments