Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வரலாற்றில் முதன்முறையாக… பொங்கலுக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை!

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (08:17 IST)
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை எதிர்வரும் ஜனவரியில் கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை 1 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மற்ற பண்டிகைகளை போல பொங்கல் பண்டிகைக்கும் தேசிய அளவிலான பண்டிகை அங்கீகாரம் அளிக்க வேண்டுமென தமிழ் ஆர்வலர்கள் பலரும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் 2021 ஜனவரி 14 பொங்கல் தினத்தன்று உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் விழாவிற்கு தேசிய பண்டிகை அங்கீகாரம் அளிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments