Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (11:23 IST)
நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடை கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க முடியாது என அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
 
பட்டாசு விற்பனையால் காற்று மாசடைகிறது என்பதால் பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பட்டாசு தொழிலை நம்பி நிறைய குடும்பங்கள் இருப்பதால், அவற்றிற்கு தடை விதிக்க முடியாது என கூறிவிட்டது. மேலும் ஆன்லைனில் பட்டாசு விற்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.
 
அதேபோல் பட்டாசு உற்பத்தியாளர்களும் குறைந்த அளவு புகை வெளியிடும் பட்டாசுகளை தயாரிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பால் பட்டாசு உற்பத்தியாளர்களும், இதனை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments