Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதாரம் வளர்சி பெற ’வருமான வரியை ஒழிக்க வேண்டும்’ - சுப்பிரமணிய சுவாமி

Webdunia
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (12:06 IST)
பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வருமான வரியை ஒழிக்க வேண்டுமென பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்  சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
நம் நாடு என்றுமில்லாத அளவுக்கு தற்போது பொருளாத மந்த நிலையை சந்தித்து வருகிறது. சமீபத்தில் ஆட்டோ மொபைல் நிறுவனங்களில் பெரும்பாலானவர்களுக்கு வேலை  பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்,உணவு பொருட்கள் துறையில் பணியாற்றுவோருக்கு சில ஆயிரம் பேரை நிறுவங்கள் வேலை விட்டு நீக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.
 
இந்நிலையில் இதற்கு உலகநாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையில் தாக்கம் தான் இந்தியாவிலும் எதிரொலிப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
 
இதுதொடர்பாக சண்டிகரில் பேட்டியளித்த சுப்பிரணிய சுவாமியிடம், நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமான பலன் தருமா என கேட்கப்பட்டது.
 
அதற்கு அவர் கூறியது : வருமான வரியை ஒழிக்க வேண்டும். அதேசமயம் நிரந்த வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை 9 % குறைக்க வேண்டும். இதைச் செயல்படுத்தினால் பொருளாதாரத்தில் மாற்றம் காணமுடியும் என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments