Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் மீது கல்வீச்சு

Webdunia
வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (15:49 IST)
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது கற்கள் வீசப்பட்டன.  
 

வாரணாசி தொகுதியில் தங்கி தேர்தல் பிரச்சாரம்  மேற்கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பனாரஸ் பல்கலைக் கழகம் அருகில் உள்ள ஒரு தெருவில் ஓட்டு கேட்ட படி சென்றார். 
 
அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சில  இளைஞர்கள் திடீரென கெஜ்ரிவாலை நோக்கி சரமாரியாக கல்வீசினார்கள்.
 
இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்தவர்களும், காவல் துறையினரும் உறுதி செய்துள்ளனர். கெஜ்ரிவாலை தாக்கியவர்கள் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டதாக  தெரிகிறது. 
 
அண்மை காலமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் அரவிந்த் கெஜ்ரிவால்,  அடிக்கடி தாக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. 
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments