Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடைபாதையில் வாழ்பவர்களின் நிலை என்ன? ஆதார் குறித்து நீதிமன்றம் கேள்வி!

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (21:16 IST)
இந்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் இதுவரை 90 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த கேள்வி ஒன்று தற்போது எழுந்துள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வீடுகளின்றி நடைபாதைகளில் வசித்து வருபவர்களுக்கு அரசின் சார்பில் காப்பகங்கள் அமைத்து தர வேண்டும் என்று வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 
 
இது குறித்து விவாதிக்கும் போது, முகவரி இல்லாததால் ஆதார் அட்டை பெறாத நடைபாதை வாசிகளின் நிலை என்ன? இந்திய அரசின் பார்வையில் அவர்கள் இல்லாத நபர்களா? என கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.
 
மேலும், இதற்கான பதிலை இவ்வழக்கின் மறுவிசாரணையின் போது வழங்க வேண்டும் என்றும் மறுவிசாரணை மூன்று வாரங்களுக்கு பின்னர் நடக்கும் என்றும் அறிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments