Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றே கடைசி? கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு கெடு!!

Webdunia
செவ்வாய், 23 ஜூலை 2019 (13:27 IST)
குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் என சபாநாயகர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 
 
கர்நாடகவில் ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் 15 பேர் ராஜினாமா செய்தனர். இதனையடுத்து குமாரசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாதம் கடந்த வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் இதற்கு முடிவு கட்டும் வகையில் இன்று காலை 10 மணி முதல் மீண்டும் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் மாலை 4 மணிக்குள் விவாதங்களை முடித்துக்கொள்ள சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
 
எனவே இன்னும் இன்று 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா? அல்லது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்வாரா? என்பது தெரிந்துவிடும் என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கிய எலான் மஸ்க்.. இந்தியாவில் எப்போது?

சென்னை சென்ட்ரல் அருகே தபால் நிலைய மேற்கூரை இடிந்து விபத்து.. ஊழியர்கள் படுகாயம்..!

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments