Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷ்மா சுவராஜ் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம்: சோனியா

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (16:38 IST)
சுஷ்மா சுவராஜ் மற்றும் 2 மாநில பாஜக முதலமைச்சர்கள் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 

 
டெல்லியில், இன்று நடைபெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், இதனை தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால், யாரும் பொறுப்பில் இருந்து தப்பிவிட முடியாது என்றும் சோனியா குற்றம்சாட்டினார்.
 
லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜும், ராஜஸ்தான் முதலமைச்சர்  வசுந்தரா ராஜேவும், வியாபம் முறைகேடு புகார் தொடர்பாக மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர்  சிவராஜ் சிங் சவுஹானும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறது என்றும் விவசாயிகளின் தற்கொலை தொடர்பாக, மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்த கருத்து, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருப்பதாகவும் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Show comments