Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயநயன்னு நச்சரித்த மாமியார் - மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த மருமகன்

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (09:38 IST)
மகாராஷ்டிராவில் நபர் ஒருவர் தனது மாமியாரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாஷ்டிர மாநிலம் தானேவை சேர்ந்தவர் அன்குஷ் பத்தி(32). இவருக்கு ஒரு மனைவி இருக்கிறார். அந்த பெண்ணால் வாய் பேசவும் முடியாது, காதும் கேட்காது.  இதனால் அன்குஷ் அவ்வப்போது மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். 
 
இந்நிலையில் நேற்றும் அன்குஷ் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். அவரை சரமாரியாக அடித்தும் துன்புறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த அன்குஷின் மாமியார், தனது மகள் தாக்கப்படுதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 
இதனையடுத்து அவர் அன்குஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு அன்குஷும் தனது மாமியாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அன்குஷ் தனது மாமியாரை முதல் மாடியில் இருந்து தள்ளிவிட்டார். இதில் கீழே விழுந்த அவரது மாமியார் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார்.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் மாமியாரை கொலை செய்த குற்றத்திற்காக அன்குஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments