Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி ராகுல் சண்டையில் எடியூரப்பாவை இழுத்து விட்ட சித்தராமையா!

Webdunia
வியாழன், 3 மே 2018 (18:36 IST)
கர்நாடக தேர்தல் நெருங்கியுள்ளதால் தேர்தல் பிரச்சாரங்களும், பாஜக - காங்கிரஸ் கட்சிகள் மாற்றி மாற்றி குற்றம்சாட்டுவதும் தற்போது வழக்கத்தில் உள்ளது. 
 
அந்த வகையில், ராகுல்காந்தி சமீபத்தில், ‘நாட்டில் நடக்கும் ஊழல், பாலியல் பலாத்காரம், சிறுபான்மையினர் மீதான தாக்குதல், நிரவ் மோடி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பாராளுமன்றத்தில் 15 நிமிடங்கள் பிரதமர் மோடியால் பேச முடியுமா? என்று சவால் விட்டார். 
 
இதர்கு பிரதமர் மோடியோ, உடுப்பி கர்நாடகா மாநில காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை குறிப்பு சீட்டு இல்லாமல் 15 நிமிடங்கள் இந்தியிலோ, ஆங்கிலத்திலோ அல்லது உங்கள் தாயாரின் தாய் மொழியான இத்தாலியிலோ பேச முடியுமா என்று ராகுலுக்கு பதில் சவால் விடுத்தார்.
இதை கேட்டதும் பொங்கி எழுந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, தனது டுவிட்டரில், அன்புள்ள பிரதமர் மோடிக்கு கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் செய்த சாதனைகளை எழுதி வைக்காமல் 15 நிமிடங்கள் பேச முடியுமா? என்று ராகுல் காந்தியிடம் சவால் விட்டு இருந்தீர்கள். நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்.
 
கர்நாடகா மாநிலத்தில் எடியூரப்பா முதல் மந்திரியாக இருந்த போது எவ்விதமான சாதனைகள் செய்தார் என்பதை நீங்கள் எழுதி வைத்தோ அல்லது காகிதத்தை பார்த்தோ 15 நிமிடங்கள் பேச முடியுமா? என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அடுத்த கட்டுரையில்