Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஜெயலலிதா வழக்கில் அவசரப்பட்டு மேல் முறையீடு செய்ய கூடாது” - ஜெய்ராம் ரமேஷ்

Webdunia
வெள்ளி, 22 மே 2015 (22:31 IST)
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அவசரப்பட்டு மேல் முறையீடு செய்ய கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், “ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் வழக்கில் அவசரப்பட்டு மேல் முறையீடு செய்ய கூடாது. அதேபோல், அவசரப்பட்டு மேல் முறையீடு செய்யாமலும் இருக்கக் கூடாது. வழக்கை அனைத்து கோணங்களிலும் ஆராய வேண்டியது மாநில அரசின் பொறுப்பு” என்று தெரிவித்தார். 
 
மேலும் அவர் கூறுகையில், “கர்நாடக அரசுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கணக்கு ரீதியாக பார்த்தால் 90 நாட்கள் அவகாசம் உள்ளது. 11 நாட்கள் முடிந்த நிலையில், கர்நாடக அரசு கால தாமதம் செய்கிறது என்று நீங்கள் கூறுவது நியாயமற்றது.
 
தீர்ப்பில் முரண்பாடுகளும் குளறுபடிகளும் இருப்பதாக தகவல் உள்ளது. எனவே இறுதியில் சட்டத்தின் படி சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எந்த முடிவாக இருந்தாலும், சிறந்த சட்ட ஆலோசனைக்கு பிறகே மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments