சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலம் அகற்றப்படாது: மத்திய அரசு உறுதி

Webdunia
வெள்ளி, 16 மார்ச் 2018 (11:31 IST)
மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்றக்கூடாது என்றும், ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு கடந்த சில வருடங்களாக சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின்போது, 'சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் ராமர் பாலத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசு பிரமாண பத்திரத்தை இன்று தாக்கல் செய்துள்ளது. எனவே ராமர் பாலத்திற்கு எந்தவித இடையூறும் வராது என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் ராமர் பாலத்தை இடிப்பதால் மத நம்பிக்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்ற சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தை மத்திய அரசு ஏற்று கொண்டுள்ளதாகவும் எனவே ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments