Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறும் பேச்சுக்கே பங்குச் சந்தையை எகிற வைத்த மோடி!!

Webdunia
புதன், 13 மே 2020 (13:23 IST)
பிரதமர் மோடியின் அறிவிப்புகளின் எதிரொலியாக மும்பையில் பங்குச்சந்தையில் வர்த்தகம் அதிகரித்துள்ளது.
 
பிரதமர் மோடி தனது நேற்றைய 5வது உரையில் 17 ஆம் தேதிக்குப் பிறகான 4 ஆம் கட்ட ஊரடங்கு பற்றியும், ரூ.20 லட்சம் கோடிக்கு நாட்டில் பொருளாதார சிறப்புத் திட்டங்கள் குறித்தும் தகவல் வெளியிட்டார்.  
 
இந்நிலையில், பிரதமர் மோடி கூறிய ரூ.20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகளை இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் குறித்து இதில் விளக்கப்படலாம் என தெரிகிறது. 
 
இது குறித்த அறிவிப்புகள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், இந்த அறிவிப்புகளின் எதிரொலியாக மும்பையில் பங்குச்சந்தையில் வர்த்தகம் அதிகரித்துள்ளது.
 
ஆம், சென்செக்ஸ் 669 புள்ளிகள் உயர்ந்து 3200040 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 205 புள்ளிகள் உயர்ந்து 9401 புள்ளிகளில் வர்த்தகமாகியது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments