Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமி ஆசிஃபாவின் வக்கீல் வெளியிட்ட பரபரப்பு தகவல்; அதிர்ச்சியில் பொதுமக்கள்

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (07:37 IST)
சிறுமியின் கொலை வழக்கை விசாரிக்கும் நான் கொலை அல்லது கற்பழிப்புக்கு ஆளாகலாம் என வழக்கை விசாரிக்கும் வக்கீல் தீபிகா சிங் ராஜவத் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா, கடந்த ஜனவரி மாதம் கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பல நாட்கள் பட்டினி போட்டு, மயக்க மருந்து கொடுத்து, தொடர்ந்து பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் போலீஸாரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பலாத்கார சம்பவத்திற்கு எதிராக நாடே கொந்தளித்துள்ளது.
இந்நிலையில் சிறுமியின் கொலை வழக்கை விசாரிக்கும் வக்கீல் தீபிகா சிங் ராஜவத், ஒரு பரபரப்பு புகாரை குறியிருக்கிறார், இந்த வழக்கில் இருந்து விலகவேண்டும் என தனக்கு கொலை மிரட்டல் வருவதாக தெரிவிதார். ஆதலால் தான் எந்நேரமும் கொலை அல்லது கற்பழிப்புக்கு ஆளாகலாம் என தெரிவித்தார். இதற்கெல்லாம் தான் பயப்படப்போவதில்லை எனவும் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்போவதாகவும் தீபிகா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்