Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம்ல பணம் எடுக்க போறீங்களா? செல்போன் கொண்டு போங்க! – எஸ்பிஐ புதிய அறிவிப்பு!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (11:34 IST)
ஸ்டேட் பேங்க் ஏடிஎம்களில் பணம் எடுக்க ஓடிபி முறையை கட்டாயமாக்கப் போவதாக எஸ்பிஐ தலைமை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் வங்கிகளும், ஏடிஎம் மையங்களும் கொண்டுள்ள ஸ்டேட் பேங்க் தனது ஏடிஎம்களில் பணம் எடுக்க ஓடிபி முறையை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டுகள் சில சமயம் வேறு யாரிடமாவது கிடைத்து விடுவதும், அதன்மூலமாக அவர்களுடைய பணம் மோசடி செய்யப்படுவதுமான புகார்கள் அனைத்து வங்கிகளிலும் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் இதுபோன்ற திருட்டு சம்பவங்களை தடுக்க எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது அவர்களது பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண் குறுந்தகவலில் அனுப்பப்படும். அதை ஏடிஎம் எந்திரத்தில் பதிவு செய்தால் மட்டுமே பணம் பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது 10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு மட்டும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுவதாகவும், வரும் 18ம் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments