Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை சபாநாயகர் தம்பிதுரை மீது உரிமை மீறல் புகார்: சசிகலா புஷ்பா மிரட்டல்!

துணை சபாநாயகர் தம்பிதுரை மீது உரிமை மீறல் புகார்: சசிகலா புஷ்பா மிரட்டல்!

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (16:19 IST)
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மீது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது உரிமை மீறல் குழுவிடம் புகார் அளிக்க உள்ளதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.


 
 
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா புஷ்பா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் உரிமை மீறல் குழுவிடம் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரைக்கு எதிராக புகார் அளிக்க உள்ளேன். பெண்ணாக, எம்பியாக என்னிடம் தம்பிதுரை முறையாக நடந்து கொள்ளவில்லை.
 
அவர் என்னை கைதி போல நடத்தியதால் உரிமை மீறல் புகார் தெரிவிப்பேன் என கூறியுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை கண்ணத்தில் அறைந்த விவகாரத்தில் ஜெயலலிதாவிடம் சசிகலா புஷ்பாவை அழைத்து சென்ற தம்பிதுரை மிகவும் கெடுபிடியாக நடந்து கொண்டதாக ஏற்கனவே சசிகலா புஷ்பா பேட்டியளித்திருந்தார்.
 
இந்நிலையில் தற்போது மக்களவை துணை சபாநாயகர் மீது உரிமை மீறல் குழுவிடம் புகார் அளிக்க இருப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments