Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (01:30 IST)
இந்த ஆண்டு சபரிமலை அய்யப்பன் சீசனில் மொத்தம் ரூ.255 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக கேரள அறநிலையத்துறை அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த வருமான கடந்த ஆண்டு கிடைத்த வருமானத்தை விட ரூ.45 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை அய்யப்பன் சீசன் மகரஜோதி தரிசனத்துடன் முடிவடைந்த நிலையில் இந்த கோவிலின் மூலம் கிடைத்துள்ள வருமானத்தின் உதவியால் அடுத்த வருடம் வரும் அய்யப்பன் பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்து கொடுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிடைக்கும் வசதிக்கு நிகராக அய்யப்பன் பக்தர்களுக்கும் பல முக்கிய வசதிகள் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து ஆலோசனை செய்ய விரைவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கவிருப்பதாகவும் கேரள அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த வருடம் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பல கூடுதல் வசதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments