Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலையில் 8 நாட்களில் ரூ.10.15 கோடி வருவாய்!!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (11:43 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 8 நாட்களில் ரூ.10.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் தகவல்.  

 
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் பலர் மாலை போட்டு வந்து தரிசனம் செய்கின்றனர். சபரிமலையில் நடைபெறும் படி பூஜை உள்ளிட்ட விசேஷ பூஜைகளை காணவும், பிரசாதத்திற்கும் வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை உயர்த்த தேவசம் போர்டு முடிவு செய்தது.
 
அதன்படி, இனி படி பூஜைக்கு ரூ.1,37,900, சகஸ்ரகலசம் ரூ.91,250, உதயாஸ்மன பூஜை ரூ.61,800 என மேலும் பல பூஜைகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. பிரசாதத்தை பொறுத்தவரையில் கெட்டு நிறைத்தல் ரூ.300, அபிஷேக நெய் ரூ.100, நீராஞ்சனம் ரூ.125, அப்பம் 1 பாக்கெட் ரூ.45 என விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த புதிய கட்டணம் இந்த ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வந்தது. 
 
இந்நிலையில்  சித்திரை விஷுசிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 8 நாட்களில் ரூ.10.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் காணிக்கையாக ரூ.4.38 கோடி வசூல் செய்யப்பட்டிருப்பதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் ஏன் அழைக்கப்படவில்லை? ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு..!

டெல்லியில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கும். திமுக.. தேதி அறிவிப்பு..!

இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments