தரிசனத்துக்கு முன்பதிவு பண்ணினா அனுமதி! உடனடி தரிசனம் ரத்து!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (08:41 IST)
சபரிமலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க உடனடி முன்பதிவு முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர். நாள்தோறும் முன்கூட்டிய ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசன முறை மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாள்தோறும் சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கான எண்ணிக்கை 90 ஆயிரமாக குறைக்கப்பட்டது. ஆனாலும் உடனடி முன்பதிவு மூலமாக மக்கள் தரிசனத்திற்கு வருவதால் கூட்டம் குறையாமல் இருந்து வந்தது. அதனால் இனி நேரடி முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. தரிசனம் செய்ய வருபவர்கள் முன்கூட்டியே ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments