Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு

Webdunia
புதன், 13 மே 2020 (20:57 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்டமாக மேலும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று நாட்டு மக்களுடன் பேசிய பிரதமர் மோடி, நான்காவது கட்ட பொது ஊரடங்கு வித்தியாசமாக இருக்கும் என தெரிவித்து, ரூ. 20 லட்சம் கோடிக்கு சிறப்பு பொருளாதார திட்டம் பற்றி தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் சிறப்பு பொருதாளாதார திட்டங்களை பற்றி அறிவித்தார்.

இந்நிலையில்,  கொரோனா வைரஸ்  தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும்,  பிரதமர் அலுவலகம் கூறியுள்ளத தகவலின் படி,  ரூ.2,000 கோடி வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்காகவும், ரூ.1,000 கோடி புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களின் நலனுக்காவும்,ரூ.100 கோடி தடுப்பு மருந்து ஆய்வுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்படுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு டெல்டாக்காரனாக தஞ்சை வந்துள்ளேன்! தஞ்சைக்கு நலத்திடங்களை வாரி வழங்கிய முதல்வர்!

திருமணத்தில் பாத்திரம் கழுவும் தம்பதியின் மகன் நீட் தேர்வில் சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச்செயல் அல்ல! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மாம்பழம் ஒரு கிலோ 5 ரூபாய்.. போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!

அமெரிக்க தூதரகம் மீதே குண்டு வீசிய ஈரான்.. இஸ்ரேல் தலைநகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments