Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு

Webdunia
புதன், 13 மே 2020 (20:57 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்டமாக மேலும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று நாட்டு மக்களுடன் பேசிய பிரதமர் மோடி, நான்காவது கட்ட பொது ஊரடங்கு வித்தியாசமாக இருக்கும் என தெரிவித்து, ரூ. 20 லட்சம் கோடிக்கு சிறப்பு பொருளாதார திட்டம் பற்றி தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் சிறப்பு பொருதாளாதார திட்டங்களை பற்றி அறிவித்தார்.

இந்நிலையில்,  கொரோனா வைரஸ்  தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும்,  பிரதமர் அலுவலகம் கூறியுள்ளத தகவலின் படி,  ரூ.2,000 கோடி வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்காகவும், ரூ.1,000 கோடி புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களின் நலனுக்காவும்,ரூ.100 கோடி தடுப்பு மருந்து ஆய்வுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்படுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments