Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 100 கோடி மதிப்புள்ள ஹெராயின் - பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தல்

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (18:01 IST)
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்திவரப்பட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
 

 
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு பெருமளவு போதைப்பொருள் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
 
அப்பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையையொட்டிய நார்லி கிராமத்தில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதைக் கண்டறிந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், அவர்களை சரணடையும்படி எச்சரித்தனர். அதனை அவர்கள் பொருட்படுத்தாமல் தப்பியோட முயன்றதுடன், வீரர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
 
இதனைத் தொடர்ந்து, வீரர்களும் திருப்பி சுட்டனர். இச்சம்பவத்தில் 2 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 21 கிலோ கிராம் எடைகொண்ட ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 100 கோடி என கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"புதிய அமைச்சரவை பட்டியல்" - உதயநிதிக்கு 3-வது இடம்.!

நேபாளத்தில் ஒரே நேரத்தில் வெள்ளம், நிலச்சரிவு: இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

சர்ஜரி செய்தபோது பெண்ணின் தலைக்குள் ஊசியை மறந்து வைத்த மருத்துவர்: அதிர்ச்சி தகவல்..!

“தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்” - உதயநிதி துணை முதல்வரானது குறித்து இபிஎஸ் கிண்டல்..!

“விஜய் கட்சி கூட்டத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதி” - கேள்வி கேட்டதால் தனியறையில் அடைத்த பவுன்சர்கள்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments